Tuesday, October 24, 2017

திருமணம் செய்து கொள்ளாத கனவு கன்னிகள்

சிலருக்கு அதிர்ஷ்டம் என்பது கூரையை பொத்துக்கொண்டு கொட்டும். அப்படி பட்ட அதிர்ஷ்டத்தின் மூலம் தொழில், புகழ், பணம் போன்ற வற்றை சம்பாதித்து கோடி கட்டி பரப்பார்கள். அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் உள்ள சிலருக்கு வாழ்க்கை சரியாக அமையாது.
ஒரு கால கட்டத்தில்(சிலர் இன்றளவும்) கனவு கன்னியாக சினிமாவில் கொடி கட்டி பறந்து வாழ்க்கை  சரியாக அமையாத சில நடிகைகளை பற்றி இங்கு பாப்போம்.

1. தபு
இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மற்றும் இன்னும் சில படங்களில் நடித்தவர். 45 வயதான தபு இதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உட்பட 50-க்கும் மேட்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதுவரை அவர் திருமணம் செய்யாமலே இருக்கிறார்.



2. சுஷ்மிதா சென்
1994-ல் Miss. Universe பட்டம் வென்ற சுஷ்மிதா சென் தமிழில் வெளியான ரட்சகன் படம் மூலம் திரையில் அறிமுகம் ஆனவர். 41 வயதான சுஷ்மிதா ஒரு பெண் குழந்தையை 2000-ம் ஆண்டு தத்து எடுத்து வளர்த்து வருகிறார். 30-க்கும் மேட்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் இதுவரை திருமணம் செய்யாமலே இருக்கிறார்.



3. ப்ரீத்தி ஜிந்தா
நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடலை யாரும் மறந்திருக்க முடியாது. ஹிந்தியில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர். Indian Premier League-ல் பங்கேற்றுள்ள பஞ்சாப் அணியின் சொந்தக்காரர். 42 வயதான ப்ரீத்தி பலமுறை காதலில் விழுந்துள்ளார். இருந்தபோதிலும்   இதுவரை திருமணம் செய்யாமலே இருக்கிறார்.



4. ஷோபனா
பரத நாட்டியத்தில் பத்ம ஸ்ரீ பட்டம் பெற்றுள்ளவர் நடிகை ஷோபனா. 80 மற்றும் 90-களில் பல படங்களில் நடித்த ஒரு முன்னணி நடிகை. 1970-ல் பிறந்த இவர் 200-க்கும் மேட்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணத்தில் ஏனோ நாட்டம் இல்லை. இதனாலேயே திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகின்றார்.



5. கௌசல்யா
37 வயதான கௌசல்யாவின் உண்மையான பெயர் நந்தினி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் ஹீரோயின், சகோதரி, அம்மா போன்ற வேடங்களை ஏற்று பல படங்களில் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் உயரமான நடிகையாக வலம் வந்தவர். சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் அவார்டு பெற்றுள்ளார். கர்நாடகாவில் பிறந்த கௌசல்யா இதுவரை திருமணம் செய்யாமலே இருக்கிறார்,



6.மல்லிகா ஷெராவத்
மிகவும் தைரியசாலியன மல்லிகா பல ஆண்களின் இதயங்களில் குடிகொண்ட இளவரசி என்றுதான் சொல்லவேண்டும். 39 வயதான மல்லிகா Bachelorette என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தன் வருங்கால கணவரை தேர்வு செய்ய முயன்றார். இருந்தாலும் மனம் கவர்ந்த ஆண் அவருக்கு சிக்க வில்லை.



7. ஊர்மிளா மடோன்கர்
90-களில் வலம் வந்த ஒரு அழகு பதுமை என்றே சொல்லவேண்டும். ரங்கீலா என்ற ஹிந்தி படத்தின் மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர். செக்ஸி என்ற வார்த்தைக்கே அர்த்தமாக இருந்தவர். இந்தியன் படத்தில் உலக நாயகனோடு ஜோடி போட்டவர். ஒரு ஆணுடனான பந்தம் எனக்கு தேவை என்று எப்பொழுதுமே தோன்றியது இல்லை என்று சொன்னவர். 42 வயதான ஊர்மிளா இதுவரை திருமணம் செய்யாமலே இருக்கிறார்.



8.நமீதா
மச்சான்ஸ் நடிகையை பற்றி சொல்ல தேவை இல்லை. எங்கள் அண்ணாவில் மிகவும் ஸ்லிமாக இருந்தவர். யார் கண் பட்டது என்று தெரியவில்லை இப்போ ரொம்ப உப்பி பொய் உள்ளார். சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரிடமும் வாங்கி கட்டி கொண்டவர். 36 வயதான இவர் இன்னும் திருமணம் செய்யவில்லை. சில நாட்களாக சரத் பாபுவுடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் உள்ளதாக ஒரு தகவல். இதை இருவருமே மறுத்துள்ளனர்.


9. நக்மா
காதலனில் பிரபு தேவாவை உருகி உருகி காதலித்தவர். பாட்சாவில் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்தவர். தமிழ் நாடு இவர் பின்னால் இருந்தது ஒரு காலம். நாட்டாமையுடன் சில படங்களில் நடித்தத்தின் விளைவு சீக்கிரமே காணாமல் போய் விட்டார். இப்பொழுது காங்கிரஸ் கட்சியில் மகளிரணி  தலைவர் பொறுப்பில் உள்ளார். 42 வயதான இவர் இன்னும் திருமணம் செய்யவில்லை.


10. கனகா
மாங்குயிலே பூங்குயிலே என்று ராமராஜுடன் டூயட் பாடியவர். ரஜினி, கமல், பிரபு என்று அணைத்து முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்டு வந்தவர்.43 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்.




என்ன படித்து முடித்து விடீர்களா. அடுத்தது இவர்களில் யாரை திருமணம் செய்யலாம் என்று யோசிச்சிட்டு இருக்கிங்களா? உங்க சாய்ஸ கமெண்டில் தெரிய படுத்தலாமே!!

Monday, October 23, 2017

அனைத்து ரெக்கார்டுகளையும் அடித்து துவைத்த விஜயின் மெர்சல்


விஜயின் மெர்சல் படத்தின் முதல் நாள் வசூல் மழையால் தமிழ் சினிமாவே குதூகலத்தில் உள்ளது.

மெர்சல் படம் குவித்த முதல் நாள் சாதனைகளில் சில இதோ.....


கேரளாவின் மிகப்பெரிய ஓப்பனிங் : ₹6.11 கோடி
சென்னையில் மிகப்பெரிய ஓப்பனிங் : ₹1.52 கோடி
U.K-யில் தமிழ் படத்தின் மிகப்பெரிய ஓப்பனிங் : ₹81.08 லட்சம்
பிரான்சில் தமிழ் படத்தின் மிகப்பெரிய ஓப்பனிங்: 4700 admissions
அமெரிக்காவில் தமிழ் படத்தின் மிகப்பெரிய நடு வாரத்தின் கலெக்சன் : $474,000
இந்தியாவில் விஜய் படத்தின் மிகப்பெரிய ஓப்பனிங்: ₹34 கோடி.

மெர்சல் படம் அமீர் கானின் டங்கலை விடவும், ஷாருக் கானின் Raees-ஐ விடவும் மிகப்பெரிய ஓப்பனிங்கை அமெரிக்காவில் பெற்றுள்ளது.

இருந்தாலும் ரஜினி படத்தை ஒருசில இடங்களில் மெர்சல் படம் முந்த முடியவில்லை. மெர்சல் இப்பொழுது தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஓப்பனிங்கில் இரண்டாம் இடந்தை பெற்றுள்ளது.
அமெரிக்கா, மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் முதல் இடம் பெற்றுள்ளது.

ரஜினியின் மிகப்பெரிய ஓப்பனிங் ரெக்கார்டை தமிழ்நாட்டில் மெர்சல் முறியடித்துள்ளதாக பல சினிமா வர்த்தக நபர்களிடம் இருந்து தகவல்கள் வந்துள்ளன ஆனால் என்னால் அவற்றை உறுதி படுத்த முடியவில்லை. என் கணக்கு படி  ரஜினியின் கபாலி ₹23.5 கோடியும், விஜயின் மெர்சல் ₹22.5 கோடியும் பெற்றுள்ளது. நான் நம்பகமான தகவல் வந்ததும் உங்களுக்கு அப்டேட் செய்கிறேன்.

இனிமேலும் மெர்சல் வசூல் மழை பெய்யுமா எனபது படம் பார்த்தவர்களின் கருத்து மற்றும் பொதுவான மக்கள் காட்டும் ஆர்வத்தை பொறுத்து அமையும். படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்த்துள்ளதாகவும், குடும்பத்துடன் பார்க்க கூடியதாகவும் இருப்பதாக தகவல். பாஜக புண்ணியத்தால் மெர்சல் படம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


எப்படியோ விஜயின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமையும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

Thanks Forbes.com

Tuesday, October 10, 2017

பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் நமது பதிவை ஆரம்பிப்போம். வடிவேலு சார் நீங்க பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

நான் பார்த்து சிரித்து ரசித்து மகிழ்ந்த வடிவேலுவின் டாப் 10 நகைச்சுவை காட்சிகளை இங்கே பட்டியலிட்டுள்ளேன். இதில் குறிப்பிட்டுள்ள சில படங்களில் அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ரசிக்கக்கூடியவை. இது என்னோட விருப்ப பட்டியல். உங்களுக்கு இதில் மாற்று கருத்து இருந்தால் கமெண்ட்டில் தெரிவிக்கவும்

1. கைப்புள்ள காமெடி from வின்னர் (Winner) 



2. பிரெண்ட்ஸ் (Friends) 



3. Sing In The Rain - மனதை திருடி விட்டாய்(Manathai Thirudi Vittai)



4. கைய பிடிச்சி இழுத்தியா from நேசம் புதுசு (Nesam Puthusu)



5. வாம்மா மின்னல் from மாயி (Maayi)



6.தீப்பொறி திருமுகம் from இங்கிலீஷ்காரன் (Englishkaaran)



7.துபாய் பாண்டி from வெற்றிகொடி கட்டு (Vetri Kodi Kattu)



8. வடை போச்சே from போக்கிரி (Pokkiri)



9. சூனா பானா from கண்ணாத்தாள் (Kannathaal)



10. கௌரவம் கௌரவம்னு நாறடிச்சிட்டியே from கார்மேகம் (Kaarmegam)



Honerable Mention
இம்சை அரசன் 23-ம் புலிகேசி (Imsai Arasan 23 aam Puli Kesi)


Thursday, January 26, 2012

இளைய தளபதியின் சிறந்த தனி மனித குணங்கள்....


சென்ற பதிவில் தலயின் சிறந்த குணங்களை பார்த்தோம். இந்த பதிவில் எனக்கு தெரிந்த/பிடித்த இளைய தளபதி விஜயின் சிறந்த தனிமனித குணங்களை பார்ப்போம். தல/சூர்யா ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த பதிவை படிக்கும் போது விஜயை ஒரு நடிகராக(நடிகர் இல்லைன்னு எங்களுக்கு தெரியும்னு நீங்க சொல்றது கேக்குது) பார்க்காமல் தனிமனிதனாக(??) பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எனக்கு அஜித் மற்றும் விஜயை பிடிக்கும். விஜயை கொஞ்சம் அதிகமாக பிடிக்கும். காரணம் எனக்கிருக்கும் தமிழன் என்ற உணர்வு. தமிழன் எங்கு தாக்கப்பட்டாலும் என் தன்மானம் சும்மா இருக்காது. விஜய் என்ற தமிழன் இணையதளங்களில், SMS-களில் தாக்கப்பட்ட போது தமிழ் உணர்வு என்னை விஜயை அதிகமாக நேசிக்க தூண்டியது.

விடா முயற்சி & உழைப்பு:
விஜய்க்கு அஜித், சூர்யா போல் அழகு கிடையாது. அவர்களை போல் சிறப்பாக நடிக்கவும் தெரியாது. அப்படி இருந்தும் அவர்களை விட முன்னணியில் இருப்பதற்கு காரணம் அவரின் கடின உழைப்பு மற்றும் விடா முயற்சி தான் காரணம். என்ன தான் அவரின் அப்பா ஆரம்பகாலத்தில் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருந்தாலும் இன்று இந்த இடத்தில் இருப்பதற்கு காரணம் அவரின் விடா முயற்சி, உழைப்பு தான். தொடர்ந்து தோல்வியானாலும் ஆக்சன் படங்களில் மட்டுமே நடித்தது விடா முயற்சியின் மற்றொரு உதாரணம்.

இன்வால்வ்மென்ட்/பொறுப்புணர்ச்சி:
தான் நடிக்கும் படத்தில் எந்த அளவுக்கு இன்வால்வ்மென்ட் இருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம். படத்தின் பாடல்களை/இசையை தானே தேர்ந்தெடுப்பது அவரது இன்வால்வ்மெண்டை பறைசாற்றுகிறது. தயாரிப்பாளரின் கஷ்டம் உணர்ந்து தன்னுடைய பொறுப்பை உணர்த்து வேறு எந்த முயற்சியும்(அதாங்க வேற வேற கெட்அப்) எடுக்காமல் தன்னால் முடித்ததை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார்.

எளிமை:
தான் பெரிய நடிகர் என்ற பந்தா எதுவும் இல்லாமல் எப்பொழுதும் எளிமையாகத்தான் இருப்பார். எந்த விழாவிற்கு சென்றாலும் கோட், சூட் இல்லாமல் சாதரணமாக தான் செல்வார். நிறைய பேச மாட்டார். நிறை குடம் நீர் தளும்பாது.

இலக்கு நிர்ணயித்து அதற்காக உழைப்பது:
மற்ற நடிகர் போல நடித்தோம் சம்பாதித்தோம் என்று இல்லாமல் தான் எதிர்காலத்தில் என்னவாக இருக்க வேண்டும் என்று தெளிவாக இலக்கு நிர்ணயித்து அதற்காக உழைப்பது. (எனக்கும் விஜய் அரசியலுக்கு வருவது பிடிக்கவில்லை. வந்தாலும் ஓட்டு போடமாட்டேன் அரசியல் அனுபவம் பெரும் வரை)

சுயநலத்தில் ஒரு பொதுநலம்:
தான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற சுயநலத்திற்காக தன் ரசிகர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தினாலும் அதன் மூலம் ஒரு சிலருக்கு உதவி செய்வது பொது நலமே. சுயநலத்திலும் ஒரு பொது நலம்.

அப்பா பிள்ளை:
இவ்வளவு பெரிய நடிகர் ஆனபிறகும் கூட தன்னுடைய அப்பா பேச்சை மறுக்காமல் அதன்படி நடப்பது என்பது மிகவும் அரிதான விஷயம் தான்(சொந்தமாக யோசிக்க தெரியாதுன்னு நீங்க மனசுக்குள்ள நினைக்குறது தெரியுது). 'எங்கள் வீட்டு பிள்ளை' இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு தந்தையும் நினைக்கிறார்கள்.

டிரென்ட் செட்டர்:
எந்த ஒரு விசயமானாலும் தன்னை அடுத்தவர் ஃபலோவ் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து தான் செய்கிறார். விஜய் எப்படி டிரென்ட் செட் பண்ணினார் என்று இங்கே படிக்கவும்.


Tuesday, January 24, 2012

நான் ரசித்த அஜித்தின் சிறந்த குணங்கள்

அஜித் ரசிகனாக இல்லாத போதும் அஜித்தின் ஒரு சில குணங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
இந்த குணங்கள் மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம்.

அழகான பெர்சனாலிட்டி:
வாழ்கையில் முன்னேற ஒருவருக்கு தேவைப்படுவது முதல் வாய்ப்பு. அப்படிப்பட்ட வாய்ப்பு சிபரிசிலோ(recommendation) அல்லது நாம் படித்த படிப்பினாலோ கிடைக்கலாம். ஆனால் தன்னுடைய வசீகர தோற்றத்தின் மூலமாக முதல் வாய்ப்பு கிடைக்க பெற்றவர் அஜித். இன்றைக்குள்ள தமிழ் நடிகர்களில் அஜித் மட்டுமே அழகான பெர்சனாலிட்டி...

தைரியம்:
தனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அது யாராக இருந்தாலும் பட்டென்று வெளிப்படையாக கூறிவிடுவார்.
உதா: கலைஞர் முன்னிலையில் விழாவிற்கு வற்புறுத்தி அழைத்தது பற்றி பேசியது, ரசிகர் மன்றங்களை கலைத்தது, தமிழ் படத்தையே ரீமேக் செய்தது.

மனிதாபிமானம் மிக்கவர்:
அஜித் உண்மையிலேயே மனிதாபிமானம் மிக்கவர். படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் சரி சமமாக நடத்துமாறு கேட்டுள்ளார்.

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாதவர்:
மங்காத்தா படம் வெளிவருதில் இருந்த சிக்கலை போக்க இன்றைய முதல்வரை சந்திக்குமாறு கூறினார்கள். ஆனால் நடிக்க வேண்டியது மட்டும் தான் என்வேலை படம் வெளியிடுவது தயாரிப்பாளர் வேலை என்று உள்ளதை உள்ளபடி கூறினார்.

ஆசை அதிகம் இல்லாதவர்:
தனக்கு மாஸ் இருந்தாலும் மற்ற நடிகர்களை போல அதிக சம்பளம் மற்றும் ஏரியா ரைட்ஸ் எதுவும் கேட்காதவர். ஆசை அதிகம் இல்லாதவர் என்பதற்கு மற்றும் ஒரு காரணம். பணம் சம்பாதிக்க வேண்டும் என்று மட்டும் நினைத்திருந்தால் அவர் மோட்டார் ரேஸில் கலந்து கொண்டிருக்க மாட்டார்.


தளபதி ரசிகர்களே கவலை வேண்டாம் அடுத்த பதிவு தளபதியை பற்றி தான். அதுவரையில் நீங்கள் எது சிறந்த குணம் என்று கருதுகிறீர்களோ அதை கமெண்ட்ஸில் தெரியப்படுத்தவும்...

Sunday, January 22, 2012

மேதை வெற்றியை தொடர்ந்து மாமேதை ஆங்கிலத்தில் : ஜேம்ஸ் கேமரூன்


மேதையின் மாபெரும்(!!) வெற்றியை தொடர்ந்து ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் தயராக காத்துகொண்டிருக்கும் அடுத்த படத்திற்காக தன்னை தயார் பண்ணிக்கொண்டிருந்த டவுசர் என்று செல்லமாக அழைக்கப்படும் மக்கள் நாயகன் ராமராஜன் லொள்ளு நேயர்களுக்கான பேட்டி என்றதும் முக மலர்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார்.

இதோ மக்கள் நாயகனின் பேட்டி உங்களுக்காக.




நாம்: என்ன சார் ரொம்ப தீவிரமா ஏதோ பண்றீங்க போல
ம.நா: என்ன பண்றேனா? மேலே இருக்குற போட்டோவ பாத்தா தெரியலையா?

நாம்: ஒரு மறத்தமிழனான நீங்க தீவிரமா இங்கிலீஷ் பேப்பர் படிக்கிறீங்களே எதுக்கு சார்?
ம.நா: நம்ம கேமராமேன் சாரி ஜேம்ஸ் கேமரூன் ஹாலிவுட்ல அவதார்-2 படம் பண்ற கேப்ல நம்மள வச்சு ஒரு படம் பண்ணனும்னு ரொம்ப கெஞ்சி கேட்டார்.. அதுக்காக தான் என்னை தயார் பண்ணிட்டுருக்கேன்.

நாம்: அவருக்கு எப்படி உங்களபத்தி தெரிஞ்சது?
ம.நா: மேதை படம் ரிலீஸ் ஆனதும் இன்டர்நெட்ல அதிகம் அடிபட்ட படம் மேதை. அதுவுமில்லாம அதிகம் தேடப்பட்ட நடிகர்களில் எனக்கு தான் முதலிடம். ரஜினி, விஜய், அஜித்து டாப் 10-ல கூட வரமுடியல. நம்ம டிகார்பியோவுக்கு ரெண்டாவது இடம் தான். முதலிடம் கிடைச்சதால கேமரூனுக்கு என்ன வச்சு படம் எடுக்க ஆசை வந்து என்னை புக் பண்ணிட்டார்..

நாம்: அப்ப நம்ம பவர் ஸ்டார், சாம் அன்டேர்சன்?
ம.நா: அவங்களுக்கெல்லாம் ஏழாவது மற்றும் பத்தாவது இடம் தான்

நாம்: இந்த படத்துல என்ன மாதிரி ரோல் பண்றீங்க?
ம.நா: 'cow'பாய் ரோல் பண்றேன்

நாம்: படத்துக்கு பேரு வச்சாச்ச சார்
ம.நா: மாமேதை
நாம்: இந்த பேரை நீங்க தான் செலக்ட் பண்ணிங்களா?
ம.நா: நான் சொன்ன பேரு 'அம்மா'மேதை. கௌபாய் சம்பந்தபட்ட படமானதால் 'ம்ம்ம்மா'மேதை-னு வச்சுக்கலாம்னு கேமரூன் சொன்னாரு.. நாம தான் தீவிர அம்மாவின் தொண்டனாச்சே அதுவுமில்லாம பசு நேசன் என்பதாலும் கடைசில 'மா'மேதை-னு வச்சாச்சு

நாம்: மாமேதை மேதை படத்தின் இரண்டாம் பாகமா?
ம.நா: இல்லை இல்லை இது டோட்டலா வேற கதை

நாம்: படத்துல எதாவது பஞ்ச் டயலாக் உண்டா சார்?
ம.நா: ஆமா உண்டு "தர்மம் தலை காக்கும்... பட், டவுசர் தான் மானம் காக்கும்..."
நாம்: சூப்பர் சார் சூப்பர். கரகாட்டகாரனுக்கு அப்புறம் மேதைக்கு ஏன் இவளோ இடைவெளி?
ம.நா: கெரகம் நல்லா இருந்ததுனால கரகம் நல்லா ஓடுச்சு.. அதுக்கு அப்புறம் கெரகம் சரி இல்லை அதான் இந்த கேப்.

நாம்: ஒரு தமிழனான நீங்க ஹாலிவுட்ல எப்படி நடிக்க ஒத்துகிட்டிங்க
ம.நா: தமிழனுக்கு பாடம் சொல்லி தரனும் என்பதற்காக தான்

நாம்: பாடம் சொல்லி தர அளவுக்கு தமிழன் என்ன பண்ணினான்?
ம.நா: தமிழ் படத்துல இங்கிலீஷ் படத்துக்கு சமமா ஒரு சீன் வந்த ரசிக்குறதுக்கு பதிலா கிண்டல் பண்றாங்க. லாஜிக் இல்லாம இங்கிலீஷ்காரன் படம் எடுத்தா கைதட்டி ரசிக்குறாங்க.. அவங்களுக்கு எல்லாம் ஒரு நல்லா பாடம் சொல்லி தரனும் அதான்..
நாம்: விஜயகாந்த் நடிச்ச நரசிம்மா, வேலாயுதம் டிரெயின் சீன், 7-ம் அறிவு கிளைமாக்ஸ் இத பத்தி தமிழன் அடிக்குற கமெண்ட்ஸ் பத்தி சொல்றிங்களா
ம.நா: ஆமாம். மாமேதை இந்த மாதிரி தமிழ் ரசிகர்களுக்கு ஒரு சாட்டை அடியாக இருக்கும்.

நாம்: சார் நமது வாசகர்களுக்காக மாமேதை படத்தின் போட்டோ தரமுடியுமா.
ம.நா: நீங்க மேதை படத்தின் வெற்றி விழாவிற்கு வாருங்கள் தருகிறேன்.

தமிழ்நாட்டு மக்களே நீங்கள் சீக்கிரம் திருந்திகொள்ளுங்கள் இல்லை என்றால் மாமேதை உங்களை திருத்த வருகிறார்.

Thursday, January 19, 2012

அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகள் - பாலியல் உறவு பற்றியது : இந்தியாவில்



நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இந்தியர்களாகிய நாம் செக்ஸ் பற்றி தான் நிறைய நேரம் யோசிக்கின்றோம். 
சமீபத்தில் இந்திய டுடே மற்றும் அவுட்லுக் பத்திரிகைகள் சமீபத்தில் பாலியல் உறவு பற்றி ஒரு சர்வே எடுத்தது. அந்த சர்வேயின் முடிவுகள் அதிர்ச்சி தரக்கூடியாத உள்ளது.
அவுட்லுக் 2011-ல் 30 மற்றும் 45 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிடம் மேற்கொண்டது. அதே சமயம் இந்திய டுடே 18 மற்றும் 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிடம் மேற்கொண்டது.

அவுட்லுக்கின் சர்வே முடிவில் 45 வயதுக்குட்பட்டவர்களில் 94 சதவிகிதம் பேர் அவர்களின் செக்ஸ் வாழ்க்கை மிகவும் திருப்தியாக உள்ளதாக கூறியுள்ளது.

அதற்கு மாறாக இந்திய டுடே 33 சதவிகித மனைவிகள் திருமணமாகிய சில வருடங்களிலே போர் அடிப்பதாக தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.

அவுட்லுக் சர்வே: 40.3 சதவிகித இந்தியர்கள் தங்களுடைய தற்போதைய செக்ஸ் வாழ்க்கை மிகவும் திருப்தியாகவும் 53.6 சதவிகிதம் பேர் திருப்தியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்திய டுடே சர்வே: மாறாக 48 சதவிகித கணவன்மார்கள் தாங்கள் திருப்தியாக உடலுறவு கொண்டது தனது மனைவியிடம் இல்லை என்றும், 49 சதவிகித மனைவிமார்கள் பொய்யான தலைவலி போன்ற காரணத்தை கூறி உடலுறவை விரும்புவதில்லையாம்.

இந்திய டுடே சர்வே: 66 சதவிகித கணவன்மார்கள் நீலப்படங்களை பார்ப்பதாகவும், அதில் 23 சதவிகிதம் பேர் கள்ளதொடர்பு வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்

மேலும் 28 சதவிகித கணவன்மார்கள் ஒரு இரவு மட்டும் கள்ளதொடர்புக்கு தயாராக உள்ளதாகவும், 16 சதவிகிதம் பேர் மனைவியை பரிமாறிக்கொள்ளவும் (swaping) தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அவுட்லுக் சர்வே: 33.4 சதவிகித ஜோடிகள் மாதத்திற்கு 11-லிருந்து 20 முறை உடலுவு வைத்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். 32.1 சதவிகித ஜோடிகள் வாரமிருமுறையும் (சண்டேனா ரெண்டா??), 31.3 சதவிகித ஜோடிகள் வரம் ஒருமுறையும் உகந்ததாக தெரிவித்துள்ளனர்.

நடுத்தர வயதில் உள்ளவர்கள் தங்களின் இளமை காலத்தை விட இப்பொழுது நன்றாக என்ஜாய் பன்னுவதாகவும், 46 சதவிகிதம் பேர் அதே மாதிரி இருப்பதாகவும், 44 சதவிகிதம் பேர் முன்னை விட இப்பொழுது சுவாரசியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் 70.8 சதவிகித ஜோடிகள் புதிது புதிதாக பரிசோதித்துக்கொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இரண்டு சர்வேயிலும் சிறிய நகரத்தில் உள்ளவர்கள் உடலுறவில் திருப்தி அடைந்ததாக கூறியுள்ளது.

அவுட்லுக் சர்வே: 23 சதவிகிதம் பேர் தங்களை விட வயது குறைந்தவர்களிடம் உடலுறவு கொள்வதாக கற்பனை செய்துள்ளதாகவும், 12.4 சதவிகிதம் பேர் பிரபலங்களிடம் உடலுறவு கொள்வதாக கற்பனை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் (வித்யா பாலன், சல்மான் கான் முன்னிலையில் உள்ளார்களாம்)

இந்திய டுடே சர்வே: சினிமா துறையில் உள்ளவர்கள் தான் மிகவும் கற்பனையில் வருபவர்களாம். 48 சதவிகித ஆண்கள் நடிகைகளை கற்பனை செய்வார்களாம்.

மேலும் 35.1 சதவிகிதம் பேர் ஆன்லைன் ஊடகங்களின் மூலம் அறிமுகமான நபரை சந்தித்துள்ளதாகவும் இதில் 58.3 சதவிகித சந்திப்பு படுக்கையறையில் முடிந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

திருமணமாகாத கன்னி பெண்களில் 77 சதவிகிதம் பேர் கருத்தடை மாத்திரை உபயோகித்ததாகவும், திருமணமான பெண்களில் 26 சதவிகிதம் பேர் கருத்தடை மாத்திரை உபயோகித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

14 சதவிகித பெண்கள் கருகலைப்பு செய்துள்ளதாகவும் இதில் 39 சதவிகித பெண்கள் திருமணம் ஆகாதவர்கள்.

10 சதவிகித ஆண்களும் 5 சதவிகித பெண்களும் தங்களின் நெருக்கமான (கணவனோ, மனைவியோ அல்லாத) சொந்தங்களிடம் தகாத உறவு வைத்துள்ளர்கள்.

இதில் 26 சதவிகிதம் பேர் மாமா, சித்தப்பா, அத்தை, சித்தி, பெற்றோர், மாமனார், மாமியார் மற்றும் சகோதர, சகோதரிகளிடம் உடலுறவு வைத்துள்ளர்கள்.

இந்திய டுடே சர்வே: 26 சதவிகிதம் பேர் திருமணத்திற்கு முன்பே செக்ஸ்ஸில் அனுபவம் பெற வேண்டும் என்றும் 17 சதவிகிதம் பேர் கன்னித்தன்மையை பற்றி கவலை படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

37 சதவிகித ஆண்களும், 12 சதவிகித பெண்களும் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உடலுறவு கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.



திருமணம் நிச்சயிகப்பட்ட ஜோடிகளில் 25 சதவிகித ஜோடி திருமனத்திற்கு முன்னரே(இரு குடும்பத்திற்கும் தெரியாமல்) உடலுறவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்திய டுடே சர்வே: 37 சதவிகித ஆண்களும், 34 சதவிகித பெண்களும் செக்ஸ் சம்பந்தப்பட்ட போட்டோ/வீடியோ பார்ப்பதாகவும், இதில் 49 சதவிகித பெண்கள் தங்கள் துணையுடன் மட்டும் தான் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் 44 சதவிகித டெல்லிவாலாக்கள் டீன்ஏஜ் பருவத்திலேயே முதல் முறையாக உடலுறவு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

காமசூத்ரா கலையை கண்டுபிச்ச நம்ம நாட்டுல இதெல்லாம்  சகஜமப்பா-னு நீங்க நினைக்குறது எனக்கு கேக்குது ..




நன்றி rediff.com