Monday, January 16, 2012

சி.பி.செந்தில்/தமிழ் ஆதி என்ன வேலை, வெட்டி இல்லாதவரா?


கொஞ்ச நாளாகவே, இல்லை.. இல்லை.. ரொம்ப நாளாகவே பதிவுலகில் ஒரு டிரென்ட் வந்திருக்கு.
அது என்னவென்றால் தன்னிலை விளக்கம் தருவது.

ஒன்னுமில்லங்க மேட்டர் சிம்பிள் தான். அதாவது நாம ஸ்கூல்/காலேஜ்/ஆபீசுக்கு ஒரு ரெண்டு, மூணு நாள் போகலேன்னா உடனே நாம அடுத்த தடவை போகும் போது கேக்குற எல்லாருக்கும் பதில் சொல்ல வேண்டியதிருக்கும்.

அனால் இந்த பதிவுலகில் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்திற்கு எந்த பதிவுமே போடாம அதுக்கு விளக்கம் தருவாங்களே பாருங்க.
"வேலை பளுவின் காரணமாக", "டைம் கிடைக்கலை", "டெட் லையனுக்குள்ள(செத்த சிங்கம் இல்ல deadline) ப்ராஜெக்ட் முடிக்கணும்".
இப்படி பல தரப்பட்ட காரணம் சொல்லுவாங்க.

ஏதோ இவங்க தான் ஆபீஸ தாங்கி நிறுத்துற மாதிரி. அப்ப தினமும் இரண்டு அல்லது மூன்று பதிவு போடுற சி.பி.செந்திலுக்கு வேற வேலையே கிடையாதா?
பதிவு போடுறது மட்டும் தானா அவருக்கு முழுநேர வேலை? கண்டிப்பாக இல்லை. எவ்வளவு வேலை இருந்தாலும் அவருடைய ரசிக கண்மணிகளுக்காக தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது ஒதுக்குகிறார்.

அப்பாடக்கர் பதிவர்களே.. உங்களை பதிவு போடுங்கள் என்று யாரும் கேட்கவில்லை. நீங்கள் ஒரு வாரம் அல்லது ஒரு மாதமாக ஏன் பதிவு போடவில்லை என்று யாரும் கேட்க போவதுமில்லை. அப்படி இருக்கும் போது நீங்களாக எதற்கு "As I am suffering from project deadline/work load kindly grant me one week leave"-னு தன்னிலை விளக்கம் தருகிறீர்கள்.

உங்களால் முடிந்தால் நம்ம "தமிழ் ஆதி" மாதிரி வெட்டி பதிவாவது போடுங்கள் உங்கள் ரசிக கண்மணிகளுக்காக.

சி.பி அண்ணன் மற்றும் ஆதி அண்ணன் அவர்களே.. உங்களிடம் கேட்காமல் உங்களை பற்றி இந்த பதிவில் கூறியதற்கு என்னை மன்னிக்கவும். நீங்கள் தான் எங்களை போன்ற பதிவர்களுக்கு ஊக்கம் அளிக்க கூடியவர்கள். தவறாமல் தினமும் இரண்டு மூன்று பதிவு போடும் உங்கள் கடமை எனக்கு பிடித்திருகிறது.


டிஸ்கி: பச்சை பச்சையாக திட்டி விட்டு பச்சை கலரில் மன்னிப்பு கேட்டால் போதுமா?

1 திட்டுகள்:

Anonymous said...

you are a headless chicken