Monday, January 9, 2012

துபாய் பாண்டியும் டவுசர் பாண்டியும்

துபாய் பாண்டி: வணக்கம் டவுசரு....
டவுசர் பாண்டி: ஆமா இவரு பெரிய இவரு.. நீரு போட்டுருக்குறது முக்கா டவுசர் தானே
துபாய் பாண்டி: அடே இதுக்கு பேரு துபாய்ல பெர்முடாஸ் டா... டவுசர் கிவுசர்னு சொன்ன செருப்பு பிஞ்சுடும்...
டவுசர் பாண்டி: என்னது செருப்பு பிஞ்சுடுமா (கோவத்தில் கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்)
துபாய் பாண்டி: அட நம்ம மாச்சான் தானான்னு சொன்னா... கோவத்த பாரு... (உடனே டவுசர் பாண்டி திட்டுறதை நிறுத்துகிறார்)


துபாய் பாண்டி: ஆமா மச்சான் தமிழ்நாட்டு மக்களுக்கு செலக்டிவ் அம்னீசியவாமே?
டவுசர் பாண்டி: ஆமா மச்சான்.. விஜயகாந்த் முல்லை பெரியார் பிரச்சனைக்கு குரல் குடுத்தால் திட்டுறாங்க.. அதே பிரச்சனைக்கு விஜய் குரல் குடுக்கலேன்னா திட்டுறாங்க.. இத தான் செலக்டிவ் அம்னீசியானு சொல்றியா மச்சான்?
துபாய் பாண்டி: இது மட்டுமில்ல மாப்ள.. வெள்ளக்காரன் டெர்மினேட்டர்-னு படம் எடுத்தா அதுல வர ஹீரோ/வில்லன் பண்றத பாத்து வாய பொளந்துட்டு பாப்பாங்க. இதே நம்ம விஜயகாந்த் நரசிம்மா படத்துல ஷாக் ட்ரீட்மென்ட் எடுக்குரப்போ ட்ரான்ஸ்பார்மர் வெடிச்சா சிரிக்குறாங்க...
டவுசர் பாண்டி: சரியா சொன்னீரு மச்சான்... ரஜினிய அரசியலுக்கு வா வா-னு சொல்லுறது... ஆனா அரசியலில் இருக்குற விஜயகாந்துக்கு ஒட்டு போட மாட்டாங்க. இவங்க தான் தமிழ் நாட்டு மக்கள்.

துபாய் பாண்டி: ஆமா மாப்ள நம்மூர்ல போன வருஷம் சினிமா எப்படி இருந்துச்சு?
டவுசர் பாண்டி: போன வருஷம் தல/தளபதிக்கு குரு உச்சத்துல இருந்தாரு.. போன வருசத்தின் வெற்றியால் தல No1, தளபதி No2, சூர்யா No3, விக்ரம் No4 இடத்தை பிடிச்சிருக்காங்க...




துபாய் பாண்டி: ஆமா மாப்ள நீ அரசியல் எல்லாம் பேசமாட்டியா?
டவுசர் பாண்டி: அட போப்பா.. ஆனானப்பட்ட அப்படக்கர்னு தலைப்பு வச்சுருக்கிற பதிவரே அத பத்தி பேசமாட்டுறாரு நமக்கு எதுக்கு வம்பு...


துபாய் பாண்டி: போன மேட்ச்லயும் சச்சின் சதம் அடிக்காம போயிட்டாரே மாப்ள..
டவுசர் பாண்டி: அவர் சதம் அடிக்காம இருக்குறது தான் அவருக்கு நல்லது.. அவர் சதம் அடிச்ச உடனே எல்லாரும் அவரை கிரிக்கெட்ல இருந்து ரிட்டையர் ஆகணும்னு சொல்லுவாங்க.. அதனால அடிக்காம இருந்தா இத சாக்கு வச்சு இன்னும் கொஞ்சம் வருஷம் அவருடைய ஆட்டத்த நாம பாக்கலாம்.
துபாய் பாண்டி: நீ சொல்றதும் சரிதான் மாப்ள. "God never plays cricket again"-னு கேக்குறதுக்கு கஷ்டமா தான் இருக்கும்..


டவுசர் பாண்டி: ஆமா பொங்கலுக்கு நீரு இங்க இருப்பீரா இல்ல துபாய் போய்டுவீரா??
துபாய் பாண்டி: இங்க தான் மாப்ள.. நண்பன் படம் பாத்துட்டு தான் துபாய்க்கு கிளம்பனும்...
டவுசர் பாண்டி: நண்பன் படத்த பத்தி எதாச்சும் மேட்டர் இருக்கா??
துபாய் பாண்டி: இல்லாமலா.. படம் நல்லா வந்துருக்காம்.. ஆனா நெட்ல இருக்குற சில படுபாவி பதிவர்கள் படம் பாத்துட்டு ஒரிஜினல் ஹிந்தி படம் அளவுக்கு இல்லன்னு சொல்லுவாங்கனு எதிர் பாக்குறாங்க.
டவுசர் பாண்டி: அது எப்படிப்பா ஒரிஜினல் ஒரிஜினல் தான்... எந்த ரீமேக்கும் ஒரிஜினல் படத்த விட நல்லா வந்திருக்கு.. முதல்ல வந்த படத்துக்கு தான் மவுசு அதிகம்.


உடனே பஸ் வர டவுசர் பாண்டி "மச்சான் பஸ் வந்துருச்சு சீக்கிரம் ஏறி எனக்கு இடம் போட்டு வையிப்பா"
அதுக்கு துபாய் பாண்டி "இதுக்கு பேரு துபாய்-ல குப்ப வண்டி.. பஸ்ஸாம்-ல பஸ்"
டவுசர் பாண்டி மறுபடியும் கோவத்துடன் திட்ட ஆரம்பிக்குறார்.


0 திட்டுகள்: