Thursday, December 22, 2011

பாகம் 3 ::: வெட்கக்கேடான உண்மைகள் ::: பாகம் 3





இதற்கு முந்தய பாகங்களை படிக்க... பாகம்-1 மற்றும் பாகம்-2

ஏழைக்கோ, பிச்சைகாரருக்கோ குடுக்கும் போது 20 ரூபாய் பெரியதாக தோன்றும் நமக்கு.
ஹோட்டலில் டிப்ஸ் குடுக்கும் போது அதே 20 ரூபாய் சிறியதாக தோன்றும்.

கடவுளிடம் பிரார்த்தனை செய்வதற்கு 3 நிமிடம் ஒதுக்குவது சிரமமாக தோன்றும்
அனால் சினிமா பார்க்க 3 மணி நேரம் ஒதுக்குவது ஈசியாக தோன்றும்.

நாள் முழுதும் உழைத்துவிட்டு ஜிம்முக்கு போவது கஷ்டமாக இருக்காது
அனால் வீட்டில் உள்ள வேலைகளை பார்ப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும்.

காதலர்கள் தினத்திற்காக வருடம் முழுவதும் காத்திருப்போம்
அனால் அன்னையர் தினம் என்று வரும் என்பது தெரியாது நமக்கு.

பணம் ஒரு பிசாசு என்போம் அனால் அதை சம்பாதித்து கொண்டே இருப்போம்.
பதவி உயர உயர தனிமைப்படுத்தபடுவோம் என்போம் ஆனால் பதவி உயர்வு வேண்டும் என்போம்.
குடி குடியை கெடுக்கும் என்போம் ஆனால் குடித்து கொண்டே இருப்போம்.



இந்த பதிவுக்கு கமெண்ட்ஸ் போடுவது சிரமமாக இருக்கும்
அனால் மொக்கை பதிவு போடுவதற்கு மட்டும் சிரமம் தெரியாது



4 திட்டுகள்:

கார்த்திக் said...

Good one..nicely said the truth

Unknown said...

மெய்யாலுமே சோக்கா கீது பா.

ananthako said...

MANITHANUKKU AALMANATHIL NALLA ENNANGAL THONRUM.THINAM PRARTHIKKA NINAPPAAN.BIRAMAIYIL MAAYAIYIL ULAKIYALIL ULALVAAN. NALLA ENNANGAL VELIPPADATTUM THANGALMOOLAM.

Unknown said...

@Sethuraman Anandakrishnan
நன்றி சேதுராமன்