Monday, December 5, 2011

இருநூறு கோடியை லஞ்சமாகப் பெற்ற பலநூறு கோடியே…!!!

திஹரிலிருந்து வந்த கனிமொழியை நம்ம தமிழர்கள் எப்படி எல்லாம் வரவேற்றார்கள் என்றால்........


இயக்கத்தின் தியாகமே ஏழை மக்களின் இதயமே!!!! வருக வருக.......

இனி நீ பூங்கொடி அல்ல போர்க்கொடி........

சூழ்ச்சி மேகங்களை சுட்டெரித்து வரும் சூரிய கதிரே வருக வருக.......

அக்னி பரிட்சையில் வென்று வரும் அகல் விளக்கே வருக வருக.......

பூட்டிய இரும்பு கூட்டின் கதவு திறந்தது
நல்ல மனம் படைத்தோரின் வாழ்த்து பலித்தது
சதிகார கூட்டத்தின் கனவு கலைத்தது
உன் நலன் நாடும் தமிழ் உள்ளங்கள் மகிழ்ந்தது வருக வருக.......

நியாயங்கள் தோற்பதில்லை
நீதி சூரியன் மறைவதில்லை

நீ தனி மரம் அல்ல தோப்பு
நீ வெல்வது காலத்தின் தீர்ப்பு

சங்கமம் கண்டவள் நீ - நாளை
சரித்திரம் படிப்பவள் நீ

ஏழைகளின் தோழி நீ
எழுச்சி சூரியனாய் வாழி நீ....

சோதனை பொருத்தாய் தண்டனை பொருத்தாய்
பொறுத்தார் பூமி ஆழ்வார்

எறும்புக்கும் தீங்கு இளைக்காத உனக்கு
இத்தனை துயரங்கள் எதற்கு???

உன் ஒவ்வொரு காயங்களும்
உன் ஒவ்வொரு வெற்றியின் படிக்கட்டுகளாகின்றன....

கலைஞரின் திருமகளே வருக.......
கழகத்தின் தமிழ்மகளே வருக.......
எதையும் தாங்கும் இதயமே வருக.......
எதிர்கால ஒளிமயமே வருக....... வருக.......

உனக்கு பூ-போன்ற மனம் அது
எஃகுவாக உருபெற்றது இன்றைய தினம்.

சதியை உடைத்து வரும் உண்மை போராளியே வருக....... வருக.......

போதும்டா சாமி... இப்பவே கண்ணா கட்டுதே...
இனி கீழே வருவது போஸ்டரில் இல்லாதது


ஓ.பி.சைனியின் முகத்தில் கரியைப் பூசிய ஸ்பெக்ட்ரம் ராணியே …!!!

சிபிஐ குற்றப் பத்திரிக்கையை மஞ்சள் பத்திரிக்கையாக்கிய மாதரசியே …!!!

திஹார் சென்ற பூம்புகாரே …!!!

கருணாநிதி பெற்றெடுத்த பூலான் தேவியே …!!!

சர்க்காரியா நாயகன் பெற்ற சர்க்கரை நாயகியே …!!!

ராசா முதுகில் குத்திய ராஜகுமாரியே …!!!

அஞ்சுகத்தின் பேத்தியான அலைக்கற்றையே.. …!!!

தென்னகத்து நீரா ராடியாவே …!!!

சங்கமம் நடத்திய குங்குமமே …!!!

தமிழினத்தில் வேலியே…

ஜாபர் சேட்டின் தோழியே.. …!!!

ராசாத்தி பெற்றெடுத்த ரங்கராட்டினமே.. …!!!

அறிவாலயத்தைக் காக்க வந்த அருபெரும் தலைவியே… …!!!

இருநூறு கோடியை லஞ்சமாகப் பெற்ற பலநூறு கோடியே… …!!!






நன்றி: சவுக்கு


0 திட்டுகள்: