Tuesday, December 20, 2011

குறைக்கிறவர்கள் கடிக்க மாட்டார்கள்.. கவலை வேண்டாம் இளைய தளபதியே..





தலைப்பை பார்த்து விட்டு இது விஜய் ரசிகனின் பதிவு என்று எண்ண வேண்டாம்.
நான் இளையதளபதியின் ரசிகன் அல்ல.. அனால் என் பதிவுகளை படிக்கும் போது உங்களுக்கு அப்படித்தான் தோன்றும்.
கவலை வேண்டாம் இளையதளபதி தப்பு செய்யும் போது தட்டி கேட்போம்..

பதிவின் தலைப்பில் கூறிய படி யார் குறைக்கிறார்கள்? யாரை கடிக்க மாட்டார்கள்?

நீங்கள் தளபதியின் ரசிகர் என்றால் இந்த பதிவின் நோக்கத்தை இந்நேரம் புரிந்துகொண்டிருப்பீர்கள். ஏனென்றால் நீங்கள் தான் புத்திசாலி ஆயிற்றே.

இந்த உலகத்தில் பிறந்த அணைத்து மனிதனுமே சுயநலவாதி தான். ஏன் இந்த பதிவுலகில் கூட அதிக ஹிட்ஸ் வேண்டும் என்பதற்காக அடுத்தவரின் பதிவை ஆட்டைய போடுபவர்கள், கொச்சையான பதிவுகள் போடுபவர்கள் தான் அதிகம்...

அப்படி இருக்க, விஜய் தமிழக மீனவர்களுக்காக மட்டும் இலங்கையை கண்டித்தார் ஆனால் தண்ணீர் தராத கேரள அரசை எதிர்த்து குரல் குடுக்கவில்லை. ஏனென்றால் இலங்கையால் தன் தொழிலுக்கு எந்த பாதகமும் இல்லை ஆனால் கேரளாவில் அவர் படம் ஓட வேண்டும் என்ற சுயநலத்தால் தான் அமைதியாக இருக்கிறார், அவர் சுயநலவாதி என்று சிலர் பலர் குறைக்கிறார்கள்.

ஒருவேளை விஜய் கேரள அரசை எதிர்த்து குரல் கொடுத்து நாளை அரசியலில் இறங்கினால் இப்படி குறைப்பர்வர்கள் அவருக்கு ஓட்டு போடவா போகிறார்கள்? நிச்சயமாக ஓட்டு போடமாட்டார்கள். அதற்கு வேறு ஒரு காரணம் சொல்லி குறைப்பார்கள்.

தளபதி அவர்களே இவர்கள் அனைவரும் சுயநலவாதிகளே. இவர்கள் குறைப்பதை கண்டுகொள்ளவேண்டாம். குறைக்கின்றவர்கள் கடிக்கமாடார்கள்.

ரஜினியை உசுபேத்தி விட்ட ஜனங்கள் தான் இப்பொழுது தளபதியையும் உசுப்பேத்துகிறார்கள்.. இதுல வெளிநாட்டு சதி இருக்குமோ???


1 திட்டுகள்:

ad said...

சினிமாவிலிருக்கின்ற அனைவருமே இதற்குமுன் எத்தனையோ விடயங்களுக்கு குரல்கொடுத்தவர்கள்தான்.ஆனால்,அனைவருமே மௌனமாகவே இருக்கிறார்கள்.
விஜய்யும் அப்படித்தானே.
அவரை மட்டும் குற்றம் சொல்வது என்றால் குற்றம் சொன்னவர்கள் இதுவரை அணை விவகாரத்துக்கு வாயைத்திறந்தார்களா?இல்லையே.பிறகென்ன.
விஜய் ரசிகன் இல்லை என்று கூறிவிட்டே எழுதியிருக்கிறீர்கள்.உங்கள் மனம் கூறியதை வெளிப்படையாக உரைத்தமைக்கு வாழ்த்துக்கள்.