Thursday, December 8, 2011

ஆமை புகுந்த வீடும்.... வடிவேல் புகுந்த கட்சியும்.....

நம்மில் பலர் ஆமை புகுந்த வீடு உருப்படாது என்ற பழமொழியை சொல்ல கேட்டிருப்போம். இதில் ஆமை என்பது எதை குறிக்கும் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. எது எப்படியோ நமக்கு அது

இப்பொழுது முக்கியம் இல்லை.

கடந்த வாரத்தில் மிகவும் பரபரப்பான செய்தி என்னவென்றால் வடிவேலு அதிமுக-வில் இணைய போகிறார் என்பதுவே.

ஏற்கனவே வடிவேலு சேர்ந்த திமுக கட்சியின் நிலைமை, அதன் முன்னாள் அமைச்சர்களின் கதி என்னவென்று அனைவரும் அறிந்ததே.
இப்பொழுது வடிவேலு அதிமுக-வில் இணைய போகிறாராம்.

அதிமுக கட்சி இப்பொழுது சொந்த செலவில் சூனியம் வைத்துள்ளது. அதாங்க விலைவாசி, ஜெ-வின் அடாவடித்தனமான நடவடிக்கையால் மக்களிடம் கெட்ட பெயர் தான் அந்த கட்சிக்கு கிடைத்துள்ளது.

எப்படியும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சி படு தோல்வி அடையபோகிறது.
இந்த நிலைமையில் வடிவேலுவும் அந்த கட்சியில் இணைந்தால் நிலைமை மேலும் மோசம் தான். அப்புறம் அனைவரும் மேலே சொன்ன பழமொழியை மறந்து கீழுள்ள புதுமொழியை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

"ஆமை புகுந்த வீடும், வடிவேல் புகுந்த கட்சியும்____________________________"
நீங்களே கோடிட்ட இடத்தை நிரப்பி கொள்ளவும்.

இந்த புதுமொழிக்கு இடம் தராமல் இப்போதிருக்கும் இடத்திலேயே வடிவேல் இருப்பது தான் அவருக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது.

சிந்திப்பாரா வடிவேலு????



0 திட்டுகள்: